என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் சூர்யாவின் 44வது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அந்தமானில் நிறைவடைந்துள்ளது.
ஜுன் மாதம் முதல் வாரத்தில் அந்தமானில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜுலை முதல் வாரத்தில் முடிந்துள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்தமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக சிறிய வீடியோ முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறை இணையும் படம் என்பதால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ல் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.