‛மஜா' பட இயக்குனர் ஷபி காலமானார் | பெயரை சுருக்கும்படி நிர்ப்பந்தித்தார்கள் ; கவுதம் வாசுதேவ் மேனன் | லூசிபர் 3ம் பாகமும் இருக்கு ; தன்னை அறியாமல் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ் | முகராசி, ஆட்டோகிராப், 96 - ஞாயிறு திரைப்படங்கள் | நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் சூர்யாவின் 44வது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அந்தமானில் நிறைவடைந்துள்ளது.
ஜுன் மாதம் முதல் வாரத்தில் அந்தமானில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜுலை முதல் வாரத்தில் முடிந்துள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்தமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக சிறிய வீடியோ முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறை இணையும் படம் என்பதால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ல் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.