ரஜினி சிகிச்சை முன்பே திட்டமிட்டது ; பக்கத்தில் நின்று பார்த்தது போல் பேசுகிறார்கள் : லோகேஷ் கனகராஜ் வருத்தம் | 'வேட்டையன்'-ஐ சமாளிப்பாரா 'மார்ட்டின்' ? | சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா? | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததால் வருத்தப்பட்டேன் - சரண்யா துராடி | மீனா தொடருக்கு எண்ட் கார்டா? | பெண் அமைச்சர் மீது 100 கோடி நஷ்ட ஈடு வழக்கு : நாகார்ஜூனா தகவல் | 'இளையராஜா' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எஸ்ரா | கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் சூர்யாவின் 44வது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அந்தமானில் நிறைவடைந்துள்ளது.
ஜுன் மாதம் முதல் வாரத்தில் அந்தமானில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜுலை முதல் வாரத்தில் முடிந்துள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்தமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக சிறிய வீடியோ முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறை இணையும் படம் என்பதால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ல் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.