மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் |

சமீபத்தில் திரைக்கு வந்த கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்ப்பமாக இருந்த அவர், இப்பட பிரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது தரையில் படுத்துக் கொண்டு சுவற்றில் கால்களை மட்டும் உயர தூக்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது போன்ற யோகா பெண்களின் தசைகள், மூட்டுகள், கணுக்கால், பாதங்களில் ஏற்படும் வலியை போக்குகின்றன. அதோடு முதுகின் கீழ் புறத்தில் அழுத்தத்தை குறைக்கவும், சோர்வான உணர்வுகளை போக்குவதற்கும் இந்த யோகா பயன்படுகிறது. உடலை அழகாக வைத்திருப்பதற்கு மட்டுமின்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இந்த பயிற்சியை நான் செய்கிறேன். உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் இந்த எளிய யோகா பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்கிறேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.