தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
சமீபத்தில் திரைக்கு வந்த கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்ப்பமாக இருந்த அவர், இப்பட பிரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது தரையில் படுத்துக் கொண்டு சுவற்றில் கால்களை மட்டும் உயர தூக்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது போன்ற யோகா பெண்களின் தசைகள், மூட்டுகள், கணுக்கால், பாதங்களில் ஏற்படும் வலியை போக்குகின்றன. அதோடு முதுகின் கீழ் புறத்தில் அழுத்தத்தை குறைக்கவும், சோர்வான உணர்வுகளை போக்குவதற்கும் இந்த யோகா பயன்படுகிறது. உடலை அழகாக வைத்திருப்பதற்கு மட்டுமின்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இந்த பயிற்சியை நான் செய்கிறேன். உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் இந்த எளிய யோகா பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்கிறேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.