ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

'குக்கூ' படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும் 'ஜோக்கர்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் இயக்குனர் ராஜூ முருகன். அந்தப் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'ஜிப்ஸி, ஜப்பான்' ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. குறிப்பாக கார்த்தியின் மார்க்கெட்டை அதல பாதாளத்திற்குத் தள்ளியது 'ஜப்பான்'. அதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என அடுத்த படங்களை நம்பியிருக்கிறார் கார்த்தி.
'ஜப்பான்' படத்திற்குப் பிறகு சில ஹீரோக்களிடம் கதை சொல்லியிருக்கிறார் ராஜூ முருகன். ஆனால், யாரும் சரியான பதிலளிக்கவில்லை என்கிறார்கள். இந்நிலையில் சசிகுமார் அவருக்குக் கை கொடுத்திருக்கிறார்.
ராஜூ முருகன் இயக்க சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும்அந்தப் படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வருகிறது. 'ஜிப்ஸி' படத்தைத் தயாரித்த திமுக எம்எல்ஏ அம்பேத் குமார் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 'ஜிப்ஸி'யில் விட்டதை இதில் மீட்பார்களா என்றுதான் கோலிவுட்டும் எதிர்பார்க்கிறது.