மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஆனவர் நடராஜன். இவரது வாழ்க்கை சினிமா ஆகிறது என்றும் அதில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்தது. பின்னர் அந்த தகவல்கள் அப்படியே மறைந்து போனது.
இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார் நடராஜன். இதுகுறித்து அவர் கூறும்போது "எனது கதையை சினிமாவாக எடுக்க சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார். நான் எப்போது கூப்பிட்டாலும் இதுகுறித்து பேச வரத் தயார் என்று சொல்லியிருக்கிறார். தற்போது நான் விளையாடிக் கொண்டிருக்கும் சீசன்கள் முடிந்த பிறகு அவரை சந்திப்பேன். அவரே தயாரிப்பதாகவும், நடிப்பதாகவும் கூறியிருக்கிறார்” என்கிறார். நடராஜன்.