பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஆனவர் நடராஜன். இவரது வாழ்க்கை சினிமா ஆகிறது என்றும் அதில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்தது. பின்னர் அந்த தகவல்கள் அப்படியே மறைந்து போனது.
இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார் நடராஜன். இதுகுறித்து அவர் கூறும்போது "எனது கதையை சினிமாவாக எடுக்க சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார். நான் எப்போது கூப்பிட்டாலும் இதுகுறித்து பேச வரத் தயார் என்று சொல்லியிருக்கிறார். தற்போது நான் விளையாடிக் கொண்டிருக்கும் சீசன்கள் முடிந்த பிறகு அவரை சந்திப்பேன். அவரே தயாரிப்பதாகவும், நடிப்பதாகவும் கூறியிருக்கிறார்” என்கிறார். நடராஜன்.