சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
இந்தியன் 2 படம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் உலகளவில் புரொமோஷன் செய்ய கிளம்பிவிட்டார். அந்தவகையில் மலேசியா சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தன.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், ‛‛அரசு பணிகளுக்கு இடையில், இந்தியாவின் பிரபல கலைஞரும் 'சூப்பர் ஸ்டாருமான' கமல்ஹாசனுடன் நேரத்தை செலவிட எனக்கு நேரம் கிடைத்தது. ஊழலுக்கு எதிரான கண்டிப்பு உள்ளிட்ட திரையுலகம் தொடர்பான கருத்துக்களை பேசவும் பரிமாறிக் கொண்டோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல், ‛‛உங்களைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம். பலதரப்பட்ட பிரச்னைகள் பற்றிய அறிவொளி கலந்த விவாதம். நமது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பற்றிய உங்கள் கருத்துகளை கேட்டு, சினிமாவின் முக்கியப் பங்கு மற்றும் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான கடுமையான சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை குறித்து உங்களுடன் ஒத்துப்போவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்'' என குறிப்பிட்டுள்ளார்.