ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து நாயகனாக நடித்த படம் நல்லதம்பி. 1949ம் ஆண்டு வெளியானது. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் அண்ணாதுரை. 1936ம்ஆண்டு வெளியான 'மிஸ்டர்டீட்ஸ் கோஸ்டுடவுன்' என்கிற ஆங்கில படத்தைப் பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன், அதைத்தழுவி ஒருகதை எழுதித்தருமாறு அண்ணாதுரையிடம் சொல்ல அவர் எழுதிக் கொடுத்த படம்தான் 'நல்லதம்பி'. இதுதான் அண்ணாதுரைக்கு முதல் திரைப்படம். டைட்டிலில், கதை, வசனம் அண்ணாதுரை எனப் போட்டார்கள்.
படத்திற்கு சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருக்கிறார். கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர் இயக்கி, இருக்கிறார்கள். பிற்காலத்தில் 'ப' வரிசைப் படங்களை இயக்கி குவித்த பீம்சிங் இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
என்.எஸ்.கிருஷ்ணன் ஜோடியாக டி.ஏ.மதுரம் நடித்திருந்தார். பானுமதி, எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, நாராயணசாமி, புளிமூட்டை ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், வி.எஸ்,ராகவன், எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
மக்களுக்காக சேவை செய்து வரும் ஒருவனுக்கு திடீரென ஜமீன்தாரராகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வான் என்பது தான் படத்தின் கதை.