ஷங்கர் கைவசம் 3 பிரம்மாண்ட கதைகள் : என்ன மாதிரி தெரியுமா... | தெலுங்கு சினிமாவின் 5வது 600 கோடி படமாக 'கல்கி 2898 ஏடி' | அட்லியின் புதிய படத்தில் ரஜினியா..., கமலா...? | ஜூலை 6ல் ராயன் இசை வெளியீட்டு விழா | ரிலீஸிற்கு முன்பே விருதுகளைக் குவிக்கும் ‛கொட்டுக்காளி' திரைப்படம் | ஹிந்திக்கு செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் | நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா | சூர்யா, ரவிக்குமார் படம் எப்போது துவங்கும்? | சிறையில் குடும்பத்தினரிடம் கதறி அழுத தர்ஷன் | இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்ட ஏஐ டெக்னாலஜி |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து நாயகனாக நடித்த படம் நல்லதம்பி. 1949ம் ஆண்டு வெளியானது. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் அண்ணாதுரை. 1936ம்ஆண்டு வெளியான 'மிஸ்டர்டீட்ஸ் கோஸ்டுடவுன்' என்கிற ஆங்கில படத்தைப் பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன், அதைத்தழுவி ஒருகதை எழுதித்தருமாறு அண்ணாதுரையிடம் சொல்ல அவர் எழுதிக் கொடுத்த படம்தான் 'நல்லதம்பி'. இதுதான் அண்ணாதுரைக்கு முதல் திரைப்படம். டைட்டிலில், கதை, வசனம் அண்ணாதுரை எனப் போட்டார்கள்.
படத்திற்கு சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருக்கிறார். கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர் இயக்கி, இருக்கிறார்கள். பிற்காலத்தில் 'ப' வரிசைப் படங்களை இயக்கி குவித்த பீம்சிங் இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
என்.எஸ்.கிருஷ்ணன் ஜோடியாக டி.ஏ.மதுரம் நடித்திருந்தார். பானுமதி, எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, நாராயணசாமி, புளிமூட்டை ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், வி.எஸ்,ராகவன், எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
மக்களுக்காக சேவை செய்து வரும் ஒருவனுக்கு திடீரென ஜமீன்தாரராகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வான் என்பது தான் படத்தின் கதை.