மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த படம் 'டான்'. அப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ரஜினிகாந்த், விஜய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோரை சந்தித்து கதை சொன்னதாகச் சொன்னார்கள். ஆனால், எந்தப் படமுமே இறுதியாகவில்லை.
இந்நிலையில் மீண்டும் 'டான்' கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிபி சக்கரவர்த்தி, அனிருத், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் மீண்டும் இணைய உள்ளார்களாம். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகிறாராம்.
விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மகாராஜா' படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாம். எங்கெங்கோ சுற்றி வந்த சிபிக்கு கடைசியில் சிவகார்த்திகேயனே அடைக்கலம் கொடுத்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.