22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த படம் 'டான்'. அப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ரஜினிகாந்த், விஜய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோரை சந்தித்து கதை சொன்னதாகச் சொன்னார்கள். ஆனால், எந்தப் படமுமே இறுதியாகவில்லை.
இந்நிலையில் மீண்டும் 'டான்' கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிபி சக்கரவர்த்தி, அனிருத், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் மீண்டும் இணைய உள்ளார்களாம். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகிறாராம்.
விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மகாராஜா' படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாம். எங்கெங்கோ சுற்றி வந்த சிபிக்கு கடைசியில் சிவகார்த்திகேயனே அடைக்கலம் கொடுத்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.