மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ் நடிகரான விஜய் சேதுபதி, ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் வில்லனாகவும், அதற்குப் பிறகு 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற ஹிந்திப் படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.
தமிழில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சேதுபதிக்கு, சமீபத்தில் வெளியான 'மகாராஜா' படம் பெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. இப்படத்தை அடுத்து 'ஏஸ், டிரைன்' ஆகிய படங்கள் அவர் நடிப்பில் வெளியாக உள்ளன.
தமிழில் தொடர்ந்து வெற்றி பெறாமல் போனதற்கு மற்ற மொழிகளிலும் நடித்ததுதான் காரணம் என நினைத்த விஜய் சேதுபதி, இனி மற்ற மொழிகளில் நடிப்பதைத் தவிர்க்க முடிவெடுத்தார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் விஜய் சேதுபதியை சென்னைக்கு வந்து சந்தித்துப் பேசினார். அப்போதே இருவரும் இணைந்து படம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது.
இப்போது அது உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். ஹிந்தியில் தயாராக உள்ள அந்தப் படத்தில் நானா படேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.