'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன், பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛தி கோட்'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செப்., 5ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இருதினங்களுக்கு முன் ‛‛சின்ன சின்ன கண்கள்'' என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இதை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரிணியும் பாடினர். ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணியின் குரலை பயன்படுத்தி பாட வைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
யுவன் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த பாடல் எனக்கு ஸ்பெஷலானது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பாடல் உருவாக்கத்தின் போது உடல்நலம் தேறிய பின் பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என நானும், வெங்கட் பிரபுவும் எண்ணினோம். ஆனால் ஒருமணிநேரம் கழித்து அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவில்லை. எனது இசை குழுவிற்கும், இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.