'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன், பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛தி கோட்'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செப்., 5ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இருதினங்களுக்கு முன் ‛‛சின்ன சின்ன கண்கள்'' என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இதை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரிணியும் பாடினர். ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணியின் குரலை பயன்படுத்தி பாட வைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
யுவன் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த பாடல் எனக்கு ஸ்பெஷலானது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பாடல் உருவாக்கத்தின் போது உடல்நலம் தேறிய பின் பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என நானும், வெங்கட் பிரபுவும் எண்ணினோம். ஆனால் ஒருமணிநேரம் கழித்து அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவில்லை. எனது இசை குழுவிற்கும், இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.