கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
'அனே பாடகி' படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா. 'ரதாவரா' படத்தின் மூலம் புகழ்பெற்றார். இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த 'ரெட் காலர்' எனும் படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கும் படம் செளகிதார். இதில் 'தியா' படத்தின் மூலம் புகழ்பெற்ற பிருத்வி அம்பர் 'சௌகிதார்' வேடத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் இந்த படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறும்போது, “தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். எல்லா மொழி மக்களுக்கும் பொருந்துகிற கதை அம்சத்துடன் உருவாகிறது” என்றார்.
இந்த படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார். சச்சின் பஸ்ரூர் இசையமைக்கிறார்.