‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு |
'அனே பாடகி' படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா. 'ரதாவரா' படத்தின் மூலம் புகழ்பெற்றார். இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த 'ரெட் காலர்' எனும் படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கும் படம் செளகிதார். இதில் 'தியா' படத்தின் மூலம் புகழ்பெற்ற பிருத்வி அம்பர் 'சௌகிதார்' வேடத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் இந்த படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறும்போது, “தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். எல்லா மொழி மக்களுக்கும் பொருந்துகிற கதை அம்சத்துடன் உருவாகிறது” என்றார்.
இந்த படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார். சச்சின் பஸ்ரூர் இசையமைக்கிறார்.