இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் |
நடிகை கஸ்தூரி தனது சோசியல் மீடியாவில் சினிமா, அரசியல் குறித்த பலதரப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
விஜய் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டது. விஜய்யோ அல்லது அமிதாப் பச்சனோ யார் சினிமாவை விட்டு வெளியேறினாலும், சினிமா எப்போதும் போல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி.