மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
நடிகை கஸ்தூரி தனது சோசியல் மீடியாவில் சினிமா, அரசியல் குறித்த பலதரப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
விஜய் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டது. விஜய்யோ அல்லது அமிதாப் பச்சனோ யார் சினிமாவை விட்டு வெளியேறினாலும், சினிமா எப்போதும் போல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி.