2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா டாண்டன். தமிழில் 'சாது, ஆளவந்தான்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை வெளியிட்ட மோசின் ஷேக் என்பவர் மீது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
“தன்னை பத்திரிகையாளராக சொல்லிக் கொள்ளும் அந்த நபர் எக்ஸ் தளத்தில் சமீபத்தில் போலி வீடியோ ஒன்றைப் பரப்பியிருந்தார். அது தவறானது, ஏமாற்றுவது. ஜூன் 1ம் தேதி மும்பையில் ரவீனா வீட்டிற்கு வெளியே நடந்த ஒரு சம்பவத்தில் அவரது வாகனம் அங்கிருந்த சில பெண்களை பாதித்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தை விலக்குவதற்கு அவர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிசிடிவி ஆதாரங்களில் அவரது வாகனம் பெண்கள் மீது மோதியதையோ அல்லது ரவீனா குடிபோதையில் இருந்ததையோ காட்டவில்லை,” என்று ரவீனாவின் வக்கீல் தெரிவித்தார்.