மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 எடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவை ஆந்திர மாநிலத்தில் நடத்த உள்ளார்கள்.
ஆந்திராவின் தலைநகராக அமைய உள்ள அமராவதி நகரில் நடக்க உள்ள முதலாவது பிரம்மாண்டமான சினிமா விழாவாக இது இருக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல். இந்த விழாவின் மூலம் இந்தப் படத்தை இந்திய அளவில் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்களாம். அதன்பின் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாம்.