பவதாரிணி குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவேயில்லை : யுவன் உருக்கம் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி | ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி… | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் | லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார் | ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்… - 100 மில்லியனைக் கடந்த முதல் 80ஸ் பாடல் | காக்கிச் சட்டையில் மீண்டும் கலக்கும் விஜயசாந்தி | அடுத்தடுத்த நஷ்டம் : அலுவலகத்தை விற்ற ரகுல் ப்ரீத் சிங் மாமனார் | திரையிசையில் தமிழ் வளர்த்த சிறுகூடல்பட்டி சித்தர் 'கவியரசர்' கண்ணதாசன் | ஏழு ஸ்வரங்களை நேசித்து, இசையை மட்டும் சுவாசித்த எம்எஸ் விஸ்வநாதன் |
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 எடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவை ஆந்திர மாநிலத்தில் நடத்த உள்ளார்கள்.
ஆந்திராவின் தலைநகராக அமைய உள்ள அமராவதி நகரில் நடக்க உள்ள முதலாவது பிரம்மாண்டமான சினிமா விழாவாக இது இருக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல். இந்த விழாவின் மூலம் இந்தப் படத்தை இந்திய அளவில் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்களாம். அதன்பின் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாம்.