22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பிரேமம் படம் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீப காலமாக பரபரப்பான கருத்துக்களை சோசியல் மீடியாவில் கூறுவதை வாடிக்கையாக வைத்திருந்த இவர் விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் மரணம் குறித்து கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதேசமயம் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவரே சுய விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை இத்தனை மாதங்கள் கழித்து தாமதமாக இப்போதுதான் பார்த்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். தாமதமாக பார்த்ததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட அல்போன்ஸ் புத்ரன் படத்தின் இயக்குனர் சிதம்பரத்திற்கும், படத்தில் நடித்தவர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்படவில்லை என்றால் எனக்கு ஆஸ்கர் விருது மீதான நம்பிக்கையே போய்விடும். அந்த அளவிற்கு படம் ஏ டு இசட் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அதேசமயம் இந்த கதையின் மாந்தர்கள் அனுபவித்த வேதனை நிஜத்தில் யாருக்கும் வரவே கூடாது” என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.