விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ரத்னம் என பல படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் திருவிளையாடல் படத்தில் தாய் தந்தையை சுற்றி வந்து விநாயகர் மாம்பழத்தை பெற்றுக்கொள்ள, உலகத்தையே சுற்றி விட்டு வரும் முருகப்பெருமாள் தனக்கு பழம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அதன் உடன் ‛கடவுள் முருகனாகவே இருந்தாலும் வீட்டில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தால் இந்த நிலைதான் ஏற்படும் போல, என்னைப் போலவே இதே வேதனையை இன்னும் யாரெல்லாம் அனுபவித்துள்ளீர்கள்' என்ற ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரியா பவானி சங்கர். அவருடைய இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவிட்டுள்ளனர்.