மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ரத்னம் என பல படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் திருவிளையாடல் படத்தில் தாய் தந்தையை சுற்றி வந்து விநாயகர் மாம்பழத்தை பெற்றுக்கொள்ள, உலகத்தையே சுற்றி விட்டு வரும் முருகப்பெருமாள் தனக்கு பழம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அதன் உடன் ‛கடவுள் முருகனாகவே இருந்தாலும் வீட்டில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தால் இந்த நிலைதான் ஏற்படும் போல, என்னைப் போலவே இதே வேதனையை இன்னும் யாரெல்லாம் அனுபவித்துள்ளீர்கள்' என்ற ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரியா பவானி சங்கர். அவருடைய இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவிட்டுள்ளனர்.