எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

தமிழ் திரையுலகில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவை விட்டு விலகிய பூர்ணிமா சமீப காலங்களில் சினிமா, சீரியல் என நடித்து வருகிறார். பூர்ணிமா தற்போது மல்லி என்ற தொடரில் தனது தோழிகளான அம்பிகா மற்றும் நளினி உடன் சேர்ந்து நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'நான் நடித்த போதும் சரி இப்போதும் சரி சமைப்பதே இல்லை. காரணம் பிசியான நடிகை என்பதற்காக இல்லை. எனக்கு சமைக்க தெரியாது. சமைத்தாலும் சுவையாக இருக்காது. ஆனால், எனது தோழிகளான ராதிகா, குஷ்பூ பிசியான நடிகைகளாக வலம் வந்தாலும் அவர்கள் சமைப்பது அருமையாக இருக்கும். விதவிதமாக சமைப்பார்கள். அதைபார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.