சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் ஹாக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு | 'காஞ்சனா' ரீரிலீஸ் : முதல் நாளில் 3 கோடி வசூல் | ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 22 நாட்கள் |

தமிழில் 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, அவ்வபோது துணிச்சலாக சில விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை கிளப்புவார் அல்லது படங்களில் துணிச்சலாக நிர்வாண காட்சிகளில் கூட நடித்து பரபரப்பை கிளப்புவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‛சிஸ்டர் மிட்நைட்' ஹிந்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தென்னிந்திய சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், நான் பணியாற்றிய சில படங்களின் படப்பிடிப்பின்போது என் மார்பகங்கள் மற்றும் பின்புறம் எடுப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பேட்களை வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டேன். அது எனக்கு மிகவும் அசவுகரியமான அனுபவமாக இருந்தது. கூடுதலான பேட்களை வைக்க சொல்வார்கள். அப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் உங்கள் அம்மா, சகோதரிகளிடம் இப்படி பேட் வைக்கச் சொல்வீர்களா? எனக் கேட்கத் தோன்றும். இவ்வாறு கூறினார். இவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.