ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

தமிழில் 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, இசைக்கலைஞர் பெனடிக் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இப்போதெல்லாம் சினிமாவில் அதிகமான வன்முறை காட்சிகளையே படமாக்கி வியாபாரம் பார்க்கின்றனர். பல பிரபலங்களை தவறாக சித்தரித்து வேதனைக்கு உட்படுத்துகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சூழலில் என்னுடைய குழந்தையை நான் வளர்க்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார்.
ஆனால் ராதிகா ஆப்தேவின் இந்த கருத்துக்கு சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதாவது, 'ரத்த சரித்திரா, பத்லாபூர், சேக்ரேட் கேம்ஸ்' என அவர் நடித்த பல படங்கள் கிராபிக்ஸ் வன்முறைகளை மையமாகக் கொண்ட கதையில்தான் உருவாகி இருந்தன. அதனால் அப்படிப்பட்ட படங்களில் இவரே நடித்துவிட்டு இப்போது அதற்கு எதிராக எப்படி கருத்துக் சொல்லலாம் என்று பலரும் ராதிகா ஆப்தேவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.




