சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரனுக்கு வரும் ஜுன் 9ம் தேதி ஞாயிறு அன்று திருத்தணியில் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த பல வருடங்களாகவே அவரது திருமணம் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்நிலையில் 45வது வயதில் அவர் தன்னுடைய திருமணத்தை செய்து கொள்ள உள்ளார்.
இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். பிரைவசி கொடுத்து மணமக்களை இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள் என அவரது அண்ணன் இயக்குனர் வெங்கட்பிரபு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமண வரவேற்பு சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் எனத் தெரிகிறது.
இதனிடையே, பிரேம்ஜி அமரன் அவருடைய நண்பர்களுக்கு 'பேச்சுலர் பார்ட்டி' கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் ஆஸ்தான நண்பர்களான பின்னணிப் பாடகர்கள் எஸ்பிபி சரண், யுகேந்திரன், நடிகர்கள் ஜெய், வைபவ், சுனில் ரெட்டி, சுப்பு பஞ்சு, தயாரிப்பாளர் டி. சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.