இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரனுக்கு வரும் ஜுன் 9ம் தேதி ஞாயிறு அன்று திருத்தணியில் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த பல வருடங்களாகவே அவரது திருமணம் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்நிலையில் 45வது வயதில் அவர் தன்னுடைய திருமணத்தை செய்து கொள்ள உள்ளார்.
இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். பிரைவசி கொடுத்து மணமக்களை இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள் என அவரது அண்ணன் இயக்குனர் வெங்கட்பிரபு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமண வரவேற்பு சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் எனத் தெரிகிறது.
இதனிடையே, பிரேம்ஜி அமரன் அவருடைய நண்பர்களுக்கு 'பேச்சுலர் பார்ட்டி' கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் ஆஸ்தான நண்பர்களான பின்னணிப் பாடகர்கள் எஸ்பிபி சரண், யுகேந்திரன், நடிகர்கள் ஜெய், வைபவ், சுனில் ரெட்டி, சுப்பு பஞ்சு, தயாரிப்பாளர் டி. சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.