2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
சூரி நடித்துள்ள 'கருடன்' படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சென்னையின் பல தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கருடனுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நம்பிக்கையாக இருக்கிறேன். அடுத்தடுத்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன்.
என் படங்களில் இனி கதை தான் ஹீரோவாக இருக்கும். நான் கதையின் நாயகனாக நடிப்பேன். இப்போதைக்கு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. காமெடியனாக நான் நடித்த பொழுது இருந்த ரசிகர்கள் இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் பொழுதும் வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து காமெடி கதைகளும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோவாக நடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் காமெடி கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
காமெடியனுக்கு கதாநாயகன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள் என்றார்.