'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நகைச்சுவை படங்களாக தொடர்ந்து இயக்கி வந்த சுந்தர்.சி அரண்மனை திரைப்படம் மூலம் ஹாரர் பக்கமும் தனது கவனத்தை திருப்பினார். அந்த படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களை இயக்கிய சுந்தர்.சி 'அரண்மனை 4' படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 நாட்களைக் கடந்து ஓடியதுடன் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இன்று (மே 31) இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தில் இறந்த பின்னும் கூட தனது குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு தென்னிந்திய படம் 100 கோடி வசூலித்துள்ளது பெருமிதமாக இருக்கிறது என்றும், இயக்குனர் சுந்தர்.சி இந்தியாவின் டாப் 3 இயக்குனர்களில் ஒருவர் என்றும், தொழில்நுட்பத்தை அவர் அழகாக கையாள்கிறார் என்றும் மும்பையில் நடைபெற்ற இந்தப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் தமன்னா.