மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நகைச்சுவை படங்களாக தொடர்ந்து இயக்கி வந்த சுந்தர்.சி அரண்மனை திரைப்படம் மூலம் ஹாரர் பக்கமும் தனது கவனத்தை திருப்பினார். அந்த படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களை இயக்கிய சுந்தர்.சி 'அரண்மனை 4' படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 நாட்களைக் கடந்து ஓடியதுடன் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இன்று (மே 31) இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தில் இறந்த பின்னும் கூட தனது குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு தென்னிந்திய படம் 100 கோடி வசூலித்துள்ளது பெருமிதமாக இருக்கிறது என்றும், இயக்குனர் சுந்தர்.சி இந்தியாவின் டாப் 3 இயக்குனர்களில் ஒருவர் என்றும், தொழில்நுட்பத்தை அவர் அழகாக கையாள்கிறார் என்றும் மும்பையில் நடைபெற்ற இந்தப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் தமன்னா.