புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் |
நகைச்சுவை படங்களாக தொடர்ந்து இயக்கி வந்த சுந்தர்.சி அரண்மனை திரைப்படம் மூலம் ஹாரர் பக்கமும் தனது கவனத்தை திருப்பினார். அந்த படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களை இயக்கிய சுந்தர்.சி 'அரண்மனை 4' படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 நாட்களைக் கடந்து ஓடியதுடன் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இன்று (மே 31) இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தில் இறந்த பின்னும் கூட தனது குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு தென்னிந்திய படம் 100 கோடி வசூலித்துள்ளது பெருமிதமாக இருக்கிறது என்றும், இயக்குனர் சுந்தர்.சி இந்தியாவின் டாப் 3 இயக்குனர்களில் ஒருவர் என்றும், தொழில்நுட்பத்தை அவர் அழகாக கையாள்கிறார் என்றும் மும்பையில் நடைபெற்ற இந்தப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் தமன்னா.