ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமாக ‛ராயன்'-ல் நடித்து முடித்துள்ளார். அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருவதோடு, சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் பின்னர் இப்படம் குறித்து எந்தவித புதிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். வாரணாசி மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.