பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமாக ‛ராயன்'-ல் நடித்து முடித்துள்ளார். அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருவதோடு, சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் பின்னர் இப்படம் குறித்து எந்தவித புதிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். வாரணாசி மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.




