பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமாக ‛ராயன்'-ல் நடித்து முடித்துள்ளார். அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருவதோடு, சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் பின்னர் இப்படம் குறித்து எந்தவித புதிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். வாரணாசி மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.