என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

2013ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் 'தீக்குளிக்கும் பச்சை மரம்'. மருத்துமனை பிணவறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதனை எம்.வினீஸ் இயக்கி இருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரஜன், சரபு நடித்திருந்தார்கள்.
11 வருடங்களுக்கு பிறகு வினீசும், மது அம்பாட்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'ஜோரா கைய தட்டுங்க'. இதனை வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரித்துள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஹரீஷ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ஶ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி வினீஷ் கூறும்போது, “இது முழுக்க முழுக்க ஜாலியான படம். யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் . படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்” என்றார்.