ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
2013ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் 'தீக்குளிக்கும் பச்சை மரம்'. மருத்துமனை பிணவறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதனை எம்.வினீஸ் இயக்கி இருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரஜன், சரபு நடித்திருந்தார்கள்.
11 வருடங்களுக்கு பிறகு வினீசும், மது அம்பாட்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'ஜோரா கைய தட்டுங்க'. இதனை வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரித்துள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஹரீஷ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ஶ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி வினீஷ் கூறும்போது, “இது முழுக்க முழுக்க ஜாலியான படம். யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் . படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்” என்றார்.