அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி | ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி… | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் | லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார் | ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்… - 100 மில்லியனைக் கடந்த முதல் 80ஸ் பாடல் | காக்கிச் சட்டையில் மீண்டும் கலக்கும் விஜயசாந்தி | அடுத்தடுத்த நஷ்டம் : அலுவலகத்தை விற்ற ரகுல் ப்ரீத் சிங் மாமனார் | திரையிசையில் தமிழ் வளர்த்த சிறுகூடல்பட்டி சித்தர் 'கவியரசர்' கண்ணதாசன் | ஏழு ஸ்வரங்களை நேசித்து, இசையை மட்டும் சுவாசித்த எம்எஸ் விஸ்வநாதன் | சோனியா அகர்வாலின் 'பிளாக் மேஜிக்' படம்: 5ம் தேதி வெளியாகிறது |
எண்பதுகளின் இறுதியில் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்து வந்த நடிகர் ராமராஜன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள படம் 'சாமானியன்'. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்தப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராமராஜன், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்க முடிவு செய்தது ஏன் என்கிற கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, “சினிமாவை விட்டு இத்தனை வருடங்களாக ஒதுங்கவில்லை. நல்ல கதைக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இத்தனை வருடங்களில் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என பத்திரிகைகள் எழுதி எழுதி கடைசியில் எனக்கு ஹீரோ வாய்ப்பே தேடி வந்தது.
முன்பு எம்ஜிஆர், சிவாஜி கணேசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் பாணியில் சிவாஜியையும் சிவாஜி பாணி படத்தில் எம்.ஜி.ஆரையும் நடிக்க வைக்க ஆலோசனை கூறினார்கள். ஆனால் அப்படி எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த தங்கச் சுரங்கம் என இரண்டு படங்களுமே வரவேற்பு பெறவில்லை. அதன் பின்னர் அவரவருக்கு ஏற்ற கதையிலேயே நடியுங்கள் என்று கூறி விட்டார்கள். அப்படி எனக்கு எந்த கதை சரியாக இருக்கும் என மக்கள் ஒத்துக் கொள்கிறார்களோ அதே வழியில் தான் நான் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்திருக்கிறேன்” என்றார்.