நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த கட்டுடனேயே விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிற்கு சென்றபோது அவர் அணிந்திருந்த காஸ்டியூம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துவிட்டு மும்பை திருப்பி உள்ள ஐஸ்வர்யா ராய் இன்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்னும் சில தினங்களில் கையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக பாலிவுட்டில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த பிறகே அவர் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.