சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் ஹாக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு | 'காஞ்சனா' ரீரிலீஸ் : முதல் நாளில் 3 கோடி வசூல் | ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 22 நாட்கள் |

கடந்த சில நாட்களாகவே ஈரான், இஸ்ரேல் போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள வான்வெளி எல்லைகள் மூடப்பட்டு விமான பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தியாவைச் சேர்ந்த பல பிரபலங்கள் குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரும் வெவ்வேறு வளைகுடா நாடுகளுக்கு சென்றவர்கள் இதனால் போர் பதற்றத்திற்கு இடையே அங்கேயே தங்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. அப்படி சிக்கிக் கொண்டவர்களில் 'லப்பர் பந்து' பட புகழ் நாயகி சுவாசிகாகவும் ஒருவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டு அங்கே தங்கி இருந்த சுவாசிகா பிப்ரவரி 28ம் தேதி திரும்புவதாக திட்டமிட்டு இருந்தார். ஆனால் திடீர் என போர் மூண்டதன் காரணமாக அவரால் ஊர் திரும்ப முடியவில்லை. நான் தனி ஒருத்தியாக மட்டும் இங்கே வந்திருந்ததால் கொஞ்சம் அதிகமாக கவலைப்பட்டேன். அதேசமயம் என்னை சுற்றி இருந்தவர்கள் ரொம்பவே ஆதரவாக இருந்தார்கள். ஒரு வழியாக தற்போது சில விமான போக்குவரத்துகள் துவங்கியிருப்பதால் ஊர் திரும்ப முடிந்தது” என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் சுவாசிகா.