ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் |
சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான மதுரை முத்துவின் அப்பா ஊர் நாட்டாமையாக இருந்தவராம். பிரிட்டிஷ்காரர் காலத்தில் முத்துவின் தாத்தாவும் அதன் பிறகு அவரது அப்பாவும் முன்சீப் என்று அழைக்கக் கூடிய ஊர் நாட்டாமை பதவி வகித்துள்ளார்கள். அவரது பேச்சை சுற்று வட்டாரத்தில் இருக்கும் 12 கிராமத்துகாரர்களும் தட்டமாட்டார்களாம். இப்படிபட்ட குடும்பத்திலிருந்து வந்த மதுரை முத்துவை, அவரது அப்பா வாத்தியராகவோ, வீஏஓ அதிகாரியாகவோ பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். ஆனால், முத்து காமெடியானாக மாறியது அவரது அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கூத்தாடி ஆயிட்டியே என்று திட்டிக் கொண்டே இருப்பாராம்.
ஒருமுறை முத்துவின் தந்தை ஊர் பிரச்னைக்காக கலெக்டரிடம் சென்ற போது, கலெக்டர் என் அப்பாவிடம் 'நீங்க மதுரை முத்து அப்பாவா?' என்று கேட்டிருக்கிறார். என் நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். அதன்பின் தான் என் அப்பாவுக்கு நானும் ஏதோ உருப்படியாக வாழ்கிறேன் என்று நம்பிக்கை வந்தது. எங்க அப்பா பெரிதாக சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் நன்றாக படிக்க வைத்தார். இப்போது நான் பெயர், புகழ், பணம் என்று இருக்கிறேன் என்று சொன்னால் அது என் அப்பா செஞ்ச புண்ணியம் தான் என்று தனது தந்தை குறித்து மதுரை முத்து உருக்கமாக பேசியுள்ளார்.