பிறந்தநாளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | ஒரு படம் வருவதற்கு முன்பே பிஸியாகும் சாய் அபயங்கர் | வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை : தொடர் பேச்சுவார்த்தை.... 6 மணி காட்சி வெளியாக வாய்ப்பு | விட்டுக் கொடுத்த விக்ரம் : வெளியாகும் 'வீர தீர சூரன் 2' | எம்புரானை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாது : மோகன்லால் ஓபன் டாக் | கார் விபத்தில் சிக்கி நடிகர் சோனு சூட் மனைவி காயம் | இசையமைப்பாளர் ஷான் ரகுமான் மீது பண மோசடி வழக்கு | டேவிட் வார்னர் பற்றி அலட்சியமாக பேசவில்லை : வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத் | யாருப்பா அந்த வில்லன் | ஓடிடி-யில் வெளியாகும் ராயன் பிரதர் படம் |
'ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறவர் சதீஷ் குமார். ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, ரம்மி, புரியாத புதிர், தரமணி அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தரமணி படத்தின் மூலம் நடிகரான இவர் அதன்பிறகு பேரன்பு, கபடதாரி, பிரண்ட்ஷிப், அநீதி படங்களில் நடித்தார்.
தற்போது அவர் தான் தயாரிக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு 'குற்றம் கடிதல் 2' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் வரவேற்பையும் பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. பார்த்திபன் நடித்த 'புதுமை பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா இயக்குகிறார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார், டிகே இசையமைக்கிறார்.
சதீஷ்குமார் கூறும்போது "ஜீவாவின் ஸ்கிரிப்ட் என்னை மிகவும் கவர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதை உருவாகிறது. இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை சொல்லும் இந்த திரைப்படம், மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து பெரும் வெற்றி பெறுவதோடு, தேசிய விருதுகளையும் வெல்லும். ஜீவாவின் திரைப்பயணத்தில் 'குற்றம் கடிதல் 2' ஒரு மைல்கல்லாக இருக்கும்.
கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.