விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர்கான். சில அற்புதமான ஹிந்தித் திரைப்படங்களையும் தயாரித்தவர். சமீபத்தில் பிரபல ஷோவான கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.
“ஏஆர் முருகதாஸ் வித்தியாசமான ஒரு மனிதர். எந்த ஒரு ஒளிவுமறைவும் அவரிடம் கிடையாது. ஒரு காட்சி பற்றி அவரிடம் நாம் ஒரு ஆலோசனை சொன்னால் அது பற்றிய அவரது கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அது நன்றாக இல்லை என்றால், சார் நன்றாக இல்லை என எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்வார். அதேசமயம் அந்த ஐடியா சிறப்பாக இருந்தால் சூப்பர் சார், சூப்பர் சார் என்பார். அதிலும் எந்தவித ஒளிவுமறைவும் இருக்காது. இப்படிப்பட்ட நல்ல குணத்தை அவரிடம் இருந்து நான் எடுத்துக் கொண்டேன்,” என்றார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த 'கஜினி' படம்தான் ஹிந்தித் திரையுலகத்தின் முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க தமிழில் ஒரு படத்தையும், சல்மான்கான் நடிக்க ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.