ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர்கான். சில அற்புதமான ஹிந்தித் திரைப்படங்களையும் தயாரித்தவர். சமீபத்தில் பிரபல ஷோவான கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.
“ஏஆர் முருகதாஸ் வித்தியாசமான ஒரு மனிதர். எந்த ஒரு ஒளிவுமறைவும் அவரிடம் கிடையாது. ஒரு காட்சி பற்றி அவரிடம் நாம் ஒரு ஆலோசனை சொன்னால் அது பற்றிய அவரது கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அது நன்றாக இல்லை என்றால், சார் நன்றாக இல்லை என எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்வார். அதேசமயம் அந்த ஐடியா சிறப்பாக இருந்தால் சூப்பர் சார், சூப்பர் சார் என்பார். அதிலும் எந்தவித ஒளிவுமறைவும் இருக்காது. இப்படிப்பட்ட நல்ல குணத்தை அவரிடம் இருந்து நான் எடுத்துக் கொண்டேன்,” என்றார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த 'கஜினி' படம்தான் ஹிந்தித் திரையுலகத்தின் முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க தமிழில் ஒரு படத்தையும், சல்மான்கான் நடிக்க ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.