அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் |
கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் மலையாள திரை உலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறியவர் வித்யாபாலன். தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் வித்யாபாலன் மலையாளத்தில் அவ்வப்போது வெளியாகி வரவேற்பு பெரும் படங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்று அவர் கடந்த வருடம் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் : தி கோ என்கிற படத்தைப் பற்றியும் அதில் மம்முட்டியின் நடிப்பு பற்றியும் சிலாகித்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மம்முட்டி மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக காதல் : தி கோர் படத்தில் அவர் ஏற்று நடித்த ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் என்பதை விட அந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த அவரது துணிச்சல் அதைவிட பாராட்டப்பட வேண்டிய விஷயம். அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டிக்கு பதிலாக இங்கே பாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு எந்த நடிகர்களும் இல்லை என்று தான் சொல்வேன் என்று கூறி உள்ளார். மேலும் இது போன்ற படங்களை ரசிக்கும் அளவிற்கு கேரள ரசிகர்களின் இலக்கியத்தன்மை இன்னும் அதிகரித்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வித்யாபாலன்.