காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் |
இந்திய சினிமாவின் மிக முக்கியமான முன்னணி பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. வயதுக்கேற்ற குரலில் பாடும் திறன் படைத்தவர். குழந்தைகள் போன்றும் பாடுவார், முதிய பெண் போன்றும் பாடுவார். 1957ம் ஆண்டு முதல் 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். அவருக்கு இன்று 86வது பிறந்த நாள்.
ஜானகியின் பெருமை உலகம் அறிந்தது. ஆனால் அந்த ஜானகியை இசை உலகிற்கு தந்து கடைசி வரை அவரை பாதுகாத்து காப்பாற்றியது அவரது கணவர் வி.ராம்பிரசாத் என்கிற ராமு. ஆந்திராவில் தெலுங்கு மேடை கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த ஜானகியை ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து பாடகி ஆக்கியவர் ராமு. ஜானகியை திருமணம் செய்த ராமு, ஒரே வருடத்தில் அவரை பாடகி ஆக்கினார்.
அன்று முதல் 1997ம் ஆண்டு மறையும் வரை ஜானகியின் நிழலாக இருந்தவர் ராமு. கச்சேரியா, பின்னணி பாடல் பதிவா எங்கும் எதிலும் அவர் ஜானகியோடு இருந்தார். கடைசி வரை ஜானகியின் ராமுவாகவே அவர் வாழ்ந்தார்.
ராமு பற்றி ஜானகி முன்பு ஒரு பேட்டியில் கூறும்போது "என்னுடைய ஒவ்வொரு பாடலையும் அவர் நேசித்தார். அவர் என் இசையின் மீது பைத்தியம் பிடித்தார். எனது இசைப்பதிவு அமர்வுகளின் போது கூட என்னைத் தனியாக விட்டுவிடமாட்டார், என்னால் அவரையும் விட்டுவிட முடியவில்லை. அவர் தனது முழு வாழ்க்கையையும் எனக்காக செலவழித்தார். இந்த உலகில் அவர் இல்லாவிட்டாலும் எனக்குள் அவர் இன்னும் இருக்கிறார் என்பார்.
ராமுவின் மறைவிற்கு பிறகு வண்ண ஆடைகள் அணிவதை தவிர்த்தார் ஜானகி அம்மா. அவர் மீது கொண்ட காதல் அது.