வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! |
தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இளையராஜாவின் இசையில் அதிகமான பாடல்களை பாடி உள்ளதால் ஜானகியை இளையராஜாதான் அறிமுகப்படுத்தினார் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜானகியை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர் தஞ்சை மாவட்டம் வேதாந்தபுரத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரங்கசாமி பார்த்தசாரதி என்ற ஆர்.பார்த்தசாரதி.
டி.எஸ்.பாலையா தயாரிப்பில் 1957ம் ஆண்டு வெளியான 'மகதலநாட்டு மேரி' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடினார். எஸ்.ஜானகிக்கு முதல் டூயட் பாடலும் இதுதான். “கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை தன் உருமாறி வந்து தேன் மாரி பெய்யுதே...” இந்தப் பாடல் மூலமே தமிழ்த் திரை உலகில் எஸ்.ஜானகி நுழைந்தார்.
பார்த்தசாரதி இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. ஆனாலும் அவருக்கு ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 12 வருடங்கள் இசை அமைப்பாளராக இருந்த அவர் 20 படங்கள்வரைதான் இசை அமைத்தார். அதன்பிறகு அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் இன் என்ற இசை வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கி சிதார் ரவிசங்கர், வீணை எஸ்.பாலச்சந்தர், கே.ஜே.ஜேசுதாஸ் போன்ற கலைஞர்களது இசைவடிவங்களை ஒலிவடிவங்களாக வெளியிட்டார்.