100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இளையராஜாவின் இசையில் அதிகமான பாடல்களை பாடி உள்ளதால் ஜானகியை இளையராஜாதான் அறிமுகப்படுத்தினார் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜானகியை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர் தஞ்சை மாவட்டம் வேதாந்தபுரத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரங்கசாமி பார்த்தசாரதி என்ற ஆர்.பார்த்தசாரதி.
டி.எஸ்.பாலையா தயாரிப்பில் 1957ம் ஆண்டு வெளியான 'மகதலநாட்டு மேரி' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடினார். எஸ்.ஜானகிக்கு முதல் டூயட் பாடலும் இதுதான். “கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை தன் உருமாறி வந்து தேன் மாரி பெய்யுதே...” இந்தப் பாடல் மூலமே தமிழ்த் திரை உலகில் எஸ்.ஜானகி நுழைந்தார்.
பார்த்தசாரதி இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. ஆனாலும் அவருக்கு ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 12 வருடங்கள் இசை அமைப்பாளராக இருந்த அவர் 20 படங்கள்வரைதான் இசை அமைத்தார். அதன்பிறகு அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் இன் என்ற இசை வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கி சிதார் ரவிசங்கர், வீணை எஸ்.பாலச்சந்தர், கே.ஜே.ஜேசுதாஸ் போன்ற கலைஞர்களது இசைவடிவங்களை ஒலிவடிவங்களாக வெளியிட்டார்.




