இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சூரியும், அவரது மனைவியும் ஓட்டளிப்பதற்காக மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வாக்காளர் பட்டியலில் சூரியின் பெயர் இடம் பெறாமல் விடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக சூரி ஓட்டளிக்க முடியவில்லை. அவரது மனைவி மட்டுமே ஓட்டளித்தார்.
அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூரி, “என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தல்லயும் என்னுடைய உரிமையை கரெக்டா செஞ்சிருக்கேன். ஆனா, இந்த தடவை இந்த பூத்துல என்னோட பேரு விடுபட்டு போச்சின்னு சொல்றாங்க. மனைவி ஓட்டு மட்டும் இருக்கு. இருந்தாலும் 100 சதவீதம் ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கலன்னும் போது ரொம்ப வேதனையா இருக்கு, மனசு கஷ்டமா இருக்கு. எங்க யாருடைய தவறு, எப்படி நடந்ததுன்னு தெரியலை. இருந்தாலும் ஓட்டு போட்டுட்டு, ஓட்டு போடுங்கன்னு சொல்றத விட, ஓட்டு போட முடியலையேன்ற வேதனையோட நான் சொல்றேன். எல்லாரும் தயவு செஞ்சு 100 சதவீதம் ஓட்டு போடுங்க. ரொம்ப முக்கியம், நாட்டுக்கு நல்லது. எல்லாரும் தவறாம உங்க வாக்கை செலுத்துங்க. நானும் அடுத்த தேர்தல்ல கண்டிப்பா என் வாக்கை செலுத்துவன்னு நம்பறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.