தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
பான் இந்தியா அளவில் வெளியீடு என்றால் அதில் தென்னிந்திய அளவில் தெலுங்குப் படங்கள்தான் முன்னணியில் இருக்கிறது. இந்த வருடம் தமிழிலும் சில பிரம்மாண்டப் படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவற்றை வட இந்தியாவில் கொண்டு சேர்க்கும் அளவிற்கு அப்படங்களின் தயாரிப்பாளர்கள் உண்மையாகவே முயற்சிப்பதில்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கும் அதே நிலைமைதான்.
ஆனால், தெலுங்கில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா' ஆகிய படங்களுக்குப் பிறகு அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிந்தி உரிமை விலையில் அதிக வியாபாரத்தைப் பெறுகின்றன. சமீபத்தில் 'புஷ்பா 2' படம் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
அடுத்து பிரபாஸ் நடித்து வெளியாக உள்ள 'கல்கி 2898 ஏடி' படம் 100 கோடிக்கும், ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் 75 கோடிக்கும், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள 'தேவரா' படம் 50 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் ரஜினியின் 'வேட்டையன்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', விஜய்யின் 'தி கோட்', அஜித்தின் 'விடாமுயற்சி', சூர்யாவின் 'கங்குவா' ஆகியவை எந்த விலைக்கு போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.