அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” |
சுந்தர் சி இயக்கி, கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'அரண்மனை 4'. இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென வெளியீட்டை மே 3ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு படங்களை தள்ளி வைக்கச் சொல்கிறார்கள் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அவர் நடித்துள்ள 'ரத்னம்' படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் என்ன நடக்கும் என்று தெரியாது என அவர் கூறியிருந்தார்.
'அரண்மனை 4' படத்தை கம்பெனி பெயர் இல்லாமல் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பது கோலிவுட் தகவல். நேற்று நடந்த 'ரத்னம்' பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட விஷாலிடம் நீங்கள்தான் தள்ளி வைக்கச் சொன்னீர்களா என்று கேட்ட போது பதறினார்.
“நான் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன், சிறிய படங்கள் கூட ஓட வேண்டும் என்பது எனது ஆசை. 'அரண்மனை 4' தள்ளிப் போக வேறு ஏதோ காரணம் இருக்கலாம். சுந்தர் சி சார் எனது அண்ணன் போன்றவர்,” என்றார்.