காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கடந்த 2010ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரபு, பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ராவணன்'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இன்றளவிலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக ராவணன் உள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராவணன் படத்தை நாளை ஏப்ரல் 17ந் தேதி சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற சில ஊர்களில் உள்ள திரையரங்குகளை தேர்ந்தெடுத்து ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.




