பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்” | எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம் | ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி | 'மனதை திருடி விட்டாய்' நாராயணமூர்த்தி காலமானார் | தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மலையாள திரையுலகில் மட்டுமே தனது நடிப்பு எல்லையை சுருக்கிக் கொண்டிருந்த நடிகர் பஹத் பாசில், இந்த இரண்டு வருடங்களில் விக்ரம், புஷ்பா, மாமன்னன் என இந்த மூன்று படங்கள் மூலமாக தென்னிந்தியாவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கூட பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். ஆனால் இவை எல்லாவற்றிலும் வில்லன் மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார்.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் மிகப்பெரிய தாதாவாக நடித்திருந்தாலும் படம் முழுக்க நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும் விதமாக நடித்திருந்தார் பஹத் பாசில். மேலும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இதில் வில்லனாக இல்லாமல் ரஜினியுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
சமீபத்தில் அவர் கூறும்போது, தெலுங்கிலும் இதுபோன்று ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அந்த வகையில் கடந்த வருடம் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ் கார்த்திகேயா தயாரிப்பில் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அதில் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' என்கிற பிக்சன் காமெடி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.