நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து வாராவாரம் புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தலே வந்தாலும் புதிய படங்கள் வருவதை நிறுத்த வாய்ப்பில்லை என இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 19ம் தேதியன்று பகல் நேரக் காட்சிகள் கண்டிப்பாக நடைபெறாது. மாலை 6 மணிக்கு மேல் வேண்டுமானால் காட்சிகள் நடைபெறலாம். இருந்தாலும் பரவாயில்லை அன்றைய தினம் வருகிறோம் என 'வல்லவன் வகுத்ததடா' என்ற படம் வெளியாகிறது.
அடுத்து ஏப்ரல் 20ம் தேதி 'பைன்டர், சிறகன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல், தேர்வுகள், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் என கடந்த ஓரிரு வாரங்களாக தியேட்டர்களுக்கு மக்கள் வரவில்லை. தேர்வுகள் ஏறக்குயை முடிந்துவிட்டன. தேர்தலும் இந்த வாரம் முடிந்துவிடும். ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன.
இருந்தாலும் வரும் வாரங்களில் பல படங்கள் வர உள்ளதால் நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.