திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தற்போது மிஸ்டர் மனைவி என்கிற தொடரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கும், ஷபானாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், ஷபானா இந்த தொடரிலிருந்து விலகுவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஷபானா கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகுவதாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷபானா, 'நான் சீரியலிலிருந்து விலகியது உண்மை தான். ஆனால், இது எனது எதிர்கால வாழ்க்கைக்காக எடுத்த முடிவு தானே தவிர வேறொன்றுமில்லை. நான் கர்ப்பமாக இல்லை. உண்மையில் அப்படி நடந்தால் சந்தோஷம் தான். சீக்கிரமே வேறொரு பெரிய ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.