போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த 20 வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது புதிய இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அஜித்துடன் விடாமுயற்சி, கமல் நடிக்கும் தக் லைப் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ள திரிஷா சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் வருகை தந்தார். அப்போது அவருக்கு ஒரு சிறிய பூந்தொட்டியை பரிசளித்து உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிஷா. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா.