'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
திரைத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரிடம் சம்பளம் பெற்ற ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்கே சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் மாறினார்.
'சத்யா மூவீஸ்' என எம்.ஜி.ஆரின் தாயாரின் பெயரிலேயே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களான ரிக்ஷாக்காரன், இதயக்கனி, உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பதற்காக 'ராணுவ வீரன்' என்ற கதையை எழுதினார் ஆர்.எம்.வீரப்பன். அப்போது எம்ஜிஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அந்த கதையில் அவர் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் அளவிற்கு அப்போது சினிமாவில் வளர்ந்து வந்தவர் ரஜினி. எனவே அந்த கதையில் ரஜினியை நடிக்க வைத்து 'ராணுவ வீரன்' என்ற பெயரிலேயே அந்த படத்தை தயாரித்தார்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். சிரஞ்சிவி வில்லனாக நடித்திருந்தார். 1981ம் ஆண்டு படம் வெளியானது. பின்னாளில் மாப்பிள்ளை, பாட்ஷா உள்ளிட்ட சில ரஜினி படங்களை சத்யா மூவீஸ் தயாரித்தது. எம்.ஜி.ஆரை போன்றே ரஜினிக்கும் நெருக்கமானவராக இருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.