ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
திரைத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரிடம் சம்பளம் பெற்ற ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்கே சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் மாறினார்.
'சத்யா மூவீஸ்' என எம்.ஜி.ஆரின் தாயாரின் பெயரிலேயே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களான ரிக்ஷாக்காரன், இதயக்கனி, உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பதற்காக 'ராணுவ வீரன்' என்ற கதையை எழுதினார் ஆர்.எம்.வீரப்பன். அப்போது எம்ஜிஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அந்த கதையில் அவர் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் அளவிற்கு அப்போது சினிமாவில் வளர்ந்து வந்தவர் ரஜினி. எனவே அந்த கதையில் ரஜினியை நடிக்க வைத்து 'ராணுவ வீரன்' என்ற பெயரிலேயே அந்த படத்தை தயாரித்தார்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். சிரஞ்சிவி வில்லனாக நடித்திருந்தார். 1981ம் ஆண்டு படம் வெளியானது. பின்னாளில் மாப்பிள்ளை, பாட்ஷா உள்ளிட்ட சில ரஜினி படங்களை சத்யா மூவீஸ் தயாரித்தது. எம்.ஜி.ஆரை போன்றே ரஜினிக்கும் நெருக்கமானவராக இருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.