ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது 'அக்கா' என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். தர்மராஜ் ஷெட்டி இயக்கும் இத்தொடரில் 'கபாலி' பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்துள்ளது.
அது குறித்து கீர்த்தி சுரேஷ், “கேரளாவில் என்னுடைய வனவாசம் முடிந்து 40 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு சோஷியல் மீடியாவிற்கும் திரும்பிவிட்டேன். அற்புதமான படப்பிடிப்பை முடித்து வீட்டுக்கு வந்துள்ளேன். என்னுடைய அடுத்த படப்பிடிப்புகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. ஆச்சரியமாக வெயிலின் சூட்டைத் தணிக்க மிஸ் மழையும் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். மீண்டும் இணைவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தி தற்போது தமிழில் 'ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.