ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் படம் கத்தனார். இந்த படத்தில் ஜெயசூர்யா ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இரண்டு ஆச்சரிய விஷயங்கள் என்னவென்றால் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. யட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.
இது தவிர நடிகர் பிரபுதேவா இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். 2011ல் வெளியான 'உருமி' படத்தை தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபுதேவா. இந்த நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவாவின் கதாபாத்திர போஸ்டர் ஒன்றை அவரது பிறந்தநாள் பரிசாக கத்தனார் படக்குழு வெளியிட்டுள்ளது. உருமி படத்திலும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு இந்த ரீ என்ட்ரியிலும் கூட மீண்டும் அதேபோன்று இன்னொரு வரலாற்று கதாபாத்திரம் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான்.