ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதை தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சண்டக்கோழி படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் நேற்று காலமானார். 83 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். இவரது இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தனது தந்தையின் இளமைக்கால புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை..” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் ஆரம்ப காலகட்டங்களில் மும்பையில் வசித்தவர், அதன்பின் அப்படியே ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து திருமலாவிலும் வசித்துள்ளார். அதன்பிறகு கேராளவில் எர்ணாகுளத்திற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மீரா ஜாஸ்மின் தவிர இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என இன்னும் நான்கு வாரிசுகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.