காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதை தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சண்டக்கோழி படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் நேற்று காலமானார். 83 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். இவரது இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தனது தந்தையின் இளமைக்கால புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை..” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் ஆரம்ப காலகட்டங்களில் மும்பையில் வசித்தவர், அதன்பின் அப்படியே ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து திருமலாவிலும் வசித்துள்ளார். அதன்பிறகு கேராளவில் எர்ணாகுளத்திற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மீரா ஜாஸ்மின் தவிர இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என இன்னும் நான்கு வாரிசுகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.