போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இடையில் ஓய்வுக்காகவும் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் அவ்வப்போது லண்டன் சென்று வருகிறார் பிரபாஸ். அங்கே செல்லும்போதெல்லாம் அவர் வழக்கமாக வாடகைக்கு ஒரு மிகப்பெரிய பங்களா ஒன்றை தேர்வு செய்து தங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது அந்த பங்களாவையே விலை கொடுத்து வாங்கி தனக்கு சொந்தமாக்கியுள்ளாராம் பிரபாஸ். இதை அடுத்து தனது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு அந்த பங்களாவில் சில புதிய வேலைப்பாடுகளையும் பிரபாஸ் செய்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.