22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது கொரோனா காலகட்டத்தில் சிம்புவை வைத்து ‛கொரோனா குமார்' என்கிற படத்தை இயக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு அந்த படம் வெறும் அறிவிப்பாகவே நின்று விட்டது. இந்த நிலையில் சிம்புவுக்கு பதிலாக அந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தின் டைட்டிலில் சிறிது மாற்றம் செய்து 'வைப் குமார்' என புதிய டைட்டில் வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்கிற தகவலும் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. ஏற்கனவே தான் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்காக கதை தயார் செய்து வந்ததாகவும், அதைத்தான் தற்போது கொஞ்சம் மாற்றி வைப் குமார் என்கிற பெயரில் கோகுல் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.