'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது கொரோனா காலகட்டத்தில் சிம்புவை வைத்து ‛கொரோனா குமார்' என்கிற படத்தை இயக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு அந்த படம் வெறும் அறிவிப்பாகவே நின்று விட்டது. இந்த நிலையில் சிம்புவுக்கு பதிலாக அந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தின் டைட்டிலில் சிறிது மாற்றம் செய்து 'வைப் குமார்' என புதிய டைட்டில் வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்கிற தகவலும் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. ஏற்கனவே தான் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்காக கதை தயார் செய்து வந்ததாகவும், அதைத்தான் தற்போது கொஞ்சம் மாற்றி வைப் குமார் என்கிற பெயரில் கோகுல் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.