டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

நடிகர் ரஜினகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவில் பேசிய அவர், ‛‛நான் எந்த ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்கு சென்றாலும் உடனே அதில் நானும் பார்டனர் என சொல்கிறார்கள். இந்த உடம்பு சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சிங்கப்பூர், அமெரிக்கா வரை போய்விட்டு வந்துள்ளது. எனக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் இங்குள்ள மருத்துவமனையில் தான் வெற்றிகரமாக நடந்தது.
ஒழுக்கம், நாணயம், ஈடுபாடு, விடாமுயற்சி என இந்த நான்கு விஷயம் யாரிடம் இல்லையோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கமல் வீட்டருகே காவிரி மருத்துவமனை இருந்தது என்பது போய் காவிரி மருத்துவமனை அருகில் கமல் வீடு உள்ளது என சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது.
நான் இப்படி பேசுவதால் கமல்ஹாசன் தப்பா நினைக்காதீங்க. மீடியாக்காரர்களே ஒரு உதாரணத்திற்கு சொன்னேன். இங்க வந்த உடனே எனக்கு மீடியாவை பார்த்ததும் பயம் வந்துவிட்டது. அதுவும் தேர்தல் நேரத்தில் மூச்சுவிட்டால் கூட பயமாக உள்ளது. எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்டது. மருந்திலும் கூட கலப்படம் வந்து இருக்கு. குழந்தைகளுக்கு அளிக்கும் மருந்தில் கூட கலப்படம் உள்ளது. அவ்வாறு செய்யும் நபர்களை தெருவில் இழுத்து சென்று அவர்களை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்'' என்றார் ரஜினி.