ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்தை நோக்கி விஜய் புறப்பட்டு சென்றபோது வழி நெடுகிலும் ரசிகர்கள் ‛தலைவா தலைவா' என்றபடி அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை அடைந்த விஜய், காரில் இருந்து இறங்கியபோது பெரிய அளவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக விஜய்யின் கார் கண்ணாடி உடைந்து இருக்கிறது. ஒரு வழியாக விஜய்யின் பாதுகாப்பு படையினர் அவரை அங்கிருந்து மீட்டு சென்றுள்ளார்கள். இப்படி ரசிகர்கள் தனது கார் கண்ணாடியை உடைத்த போதும் அது குறித்து எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாத விஜய், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு தான் இதற்கு காரணம். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.