விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் 'புறநானூறு' படம் குறித்து அதன் இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா இணைந்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
'புறநானூறு' படத்திற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி எங்களது மனதிற்கு நெருக்கமானது மற்றும் சிறப்பானது. உங்களுக்காக எங்களது சிறந்ததைக் கொடுக்க வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
'கங்குவா' படத்திற்குப் பிறகு 'அயலான்' ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கலாம் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் 'புறநானூறு' ஆரம்பமாகும் என்கிறார்கள்.