கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் 'புறநானூறு' படம் குறித்து அதன் இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா இணைந்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
'புறநானூறு' படத்திற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி எங்களது மனதிற்கு நெருக்கமானது மற்றும் சிறப்பானது. உங்களுக்காக எங்களது சிறந்ததைக் கொடுக்க வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
'கங்குவா' படத்திற்குப் பிறகு 'அயலான்' ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கலாம் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் 'புறநானூறு' ஆரம்பமாகும் என்கிறார்கள்.