ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் 'புறநானூறு' படம் குறித்து அதன் இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா இணைந்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
'புறநானூறு' படத்திற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி எங்களது மனதிற்கு நெருக்கமானது மற்றும் சிறப்பானது. உங்களுக்காக எங்களது சிறந்ததைக் கொடுக்க வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
'கங்குவா' படத்திற்குப் பிறகு 'அயலான்' ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கலாம் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் 'புறநானூறு' ஆரம்பமாகும் என்கிறார்கள்.