ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் 'புறநானூறு' படம் குறித்து அதன் இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா இணைந்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
'புறநானூறு' படத்திற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி எங்களது மனதிற்கு நெருக்கமானது மற்றும் சிறப்பானது. உங்களுக்காக எங்களது சிறந்ததைக் கொடுக்க வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
'கங்குவா' படத்திற்குப் பிறகு 'அயலான்' ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கலாம் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் 'புறநானூறு' ஆரம்பமாகும் என்கிறார்கள்.




