நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இரண்டு தெலுங்குப் படங்கள் உள்ளன. ஒன்று பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 எடி', மற்றொன்று அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'.
தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டசபைத் தேர்தலும் அதே நாளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 9ம் தேதி 'கல்கி 2898 எடி' படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அந்தப் படம் தள்ளிப் போனால் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், 'புஷ்பா 2' படக்குழு தரப்பில் வேறு எந்தத் தேதியிலும் படத்தை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி ஏற்கெனவே அறிவித்த தேதியில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்களாம்.